tamilnadu

img

உத்தரப்பிரதேச மாநிலத் தலைவர் ராஜ் பப்பர்  ராஜினாமா

லக்னோ:
உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்துள்ளது. ரேபரேலியில் சோனியா காந்தி மட்டுமே வெற்றிபெற்றுள்ளார். இந்நிலையில், இந்த தோல்விக்குப் பொறுப்பேற்று காங்கிரசின் உத்தரப்பிரதேச மாநிலத் தலைவர் ராஜ் பப்பர், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். தேர்தல் முடிவுகள் உத்தர பிரதேச காங்கிரஸ் கட்சிக்கு வேதனை அளிப்பதாகவும். பொறுப்பை உரிய முறையில் மேற்கொள்ளவில்லை என்ற குற்ற உணர்ச்சி தனக்கு இருப்பதாகவும் ராஜ்பப்பர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.